News January 2, 2025

விக்கிரவாண்டியில் போக்குவரத்து நெரிசல்

image

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய வாகனங்களால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது. டோல்பிளாசாவில் வாகனங்கள் எளிதாக செல்ல 8 லேன்களும் திறக்கப்பட்டன. நேற்று (ஜன.1) இரவு 7 மணி வரை 30,000 வாகனங்கள் சென்னை நோக்கி சென்றன. விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதி ஸ்தம்பித்து காணப்பட்டது.

Similar News

News November 8, 2025

விழுப்புரம் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

விழுப்புரம்: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

image

விழுப்புரம் மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News November 8, 2025

விழுப்புரம்: தொழிலாளியிடம் ரூ.1 லட்சம் கொள்ளை

image

திருவெண்ணெய்நல்லூர் வட்டம், திருமுண்டீச்சரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ம.ஜெயச்சந்திரன். சுமை வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், கடந்த வியாழக்கிழமை முற்பகலில் அங்குள்ள வங்கியில் அடமானம் வைத்த தனது நகைகளை மீட்பதற்காக ரூ.1 லட்சம் பணத்துடன் சென்றுள்ளார். வங்கி அலுவலர்கள் அடுத்த வாரம் வருமாறு கூறியதால் வீடு திரும்பிய அவர், வாகனத்தில் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

error: Content is protected !!