News January 2, 2025
திருப்பத்தூரில் நேற்று ஒரே நாளில் 3 விபத்து

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்குள் ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவர் மீது மோதி சுற்றுலா வேன் கவிழ்ந்தது. ஆம்பூர் அருகே மாராப்பட்டு பகுதியில் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்து மற்றும் நாட்டறம்பள்ளி என 3 வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் ஒருவர் உயிரிழந்தார். புத்தாண்டு தினத்தில் விபத்து ஏற்பட்டது குறித்து மக்கள் வேதனை தெரிவித்தனர்.
Similar News
News January 14, 2026
திருப்பத்தூர்: கத்திக் குத்தில் முடிந்த வாக்குவாதம்!

அம்பலூர் அடுத்த கவுக்காப்பட்டு பகுதியில் நேற்று (ஜன.13) இரவு முன்விரோதம் காரணமாக இருபிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி கத்தி மற்றும் இரும்பு கம்பியால் இரு பிரிவினருக்கிடையே தாக்குதல் ஏற்பட்டது. இதில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News January 14, 2026
திருப்பத்தூர்: மது போதையில் வாலிபர்கள் அட்டூழியம்!

தேவலாபுரம் அடுத்த ஸ்டார் சிட்டி பகுதியில் நேற்று முன்தினம் (ஜன.12) இரவு அஸ்ரத் (22), அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகப்பன் (21), எல்.மாங்குப்பத்தை சேர்ந்த நிதிஷ் (20) ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அஸ்ரத்தாய் மற்ற இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
News January 14, 2026
திருப்பத்தூர்: தந்தை கண்முன்னே 3 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த புலவர்பள்ளி, கெஜலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று (ஜன.13) தனது உறவினர் மற்றும் 3 வயது மகள் சன்மதியுடன், ஆலங்காயம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி பைக் சாலையில் விழுந்தது. இதில் குழந்தை சன்மதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


