News January 2, 2025

சிறைகளில் ஜாதி பாகுபாடு கூடாது!

image

சிறைகளில் கைதிகள் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை தடுக்கும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. சிறைகளில் ஜாதி பாகுபாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஜாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலைகள் வழங்கக் கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

Similar News

News September 14, 2025

BREAKING: அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகிறது

image

TN-ல் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகும் என கூறியுள்ளனர். நடப்பாண்டில் அக்டோபர் 3-வது வாரத்தில் பருவமழை தொடங்கி, ஜனவரி மாதம் வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக பருவமழைக்கு முன்பு வடிகால் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள ரெடியா?

News September 14, 2025

காதல் திருமணம்: மனம்விட்டு பேசிய உதயநிதி

image

சென்னையில் அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய DCM உதயநிதி, தானும் காதல் திருமணம் செய்தவர்தான் எனவும், அதற்கு எவ்வளவு தடங்கல்கள் வரும் என தனக்கு தெரியும் என்றும் கலகலப்பாக பேசினார். பிறகு, பெரும்பாலான காதல் ஜோடிகளை சேர்த்துவைப்பதால், இது அறநிலையத்துறையா? அன்புநிலையத்துறையா? என நகைச்சுவையாக கேள்வியும் எழுப்பினார்.

News September 14, 2025

பசுவை காப்பவர்களுக்கு Vote பண்ணுங்க: சங்கராச்சாரியார்

image

பிஹாரின் 243 தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்த போவதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார். பசு வதையை பாவமாக கருதும், இந்துக்களின் பாதுகாப்புக்காக பாடுபடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பாஜக, பசு பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதாக மோடி கூறினாலும், நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என சாடினார்.

error: Content is protected !!