News January 2, 2025
திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணையும் 8 ஊராட்சிகள்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு அருகே உள்ள அடியனூத்து, பாலகிருஷ்ணாபுரம், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, முள்ளிப்பாடி, பள்ளப்பட்டி, சீலப்பாடி, தோட்டனூத்து ஆகிய ஊராட்சிகளில் குடியிருப்புகளும், மக்கள் தொகையும் அதிகமாக உள்ளது. மேலும் இவ்வூராட்சிகளில் பெரும்பான்மையினர் வேளாண்மையில்லாத தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள 8 கிராம ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளன.
Similar News
News August 19, 2025
திண்டுக்கல்லில் இலவச பட்டா வேண்டுமா..?

திண்டுக்கல் மக்களே.., ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 19, 2025
திண்டுக்கலில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (ஆகஸ்ட் 19) நடைபெறுகிறது. பழனி பெருநகராட்சியின் 10, 11, 12 வார்டுகளுக்காக, ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடையலாம். திண்டுக்கல் மாநகராட்சி, அகரம் பேரூராட்சி, வத்தலக்குண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.
News August 18, 2025
திண்டுக்கல்: ரூ.1,81,500 சம்பளத்தில் வேலை! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறவனத்தில் (TNPL) ரூ.1,81,500 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 9 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 20) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <