News January 2, 2025

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

image

தமிழகத்தில் 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1-7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே 3ஆம் பருவத்துக்கான பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட கல்விப் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை மாவட்ட வாரியாக கல்வித்துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.

Similar News

News November 28, 2025

வந்துட்டான்.. வந்துட்டான்! அவெஞ்சர்ஸ்: Doomsday அப்டேட்!

image

Avengers: Doomsday படத்தின் மூலம், Marvel-ன் மிகப்பெரிய ஹீரோ கேரக்டரில் இருந்து கொடூரமான வில்லனாக மாறியுள்ளார் ராபர்ட் டவுனி Jr. அவரை ‘Doctor Doom’ கேரக்டரில் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ள நிலையில், போட்டோ ஒன்றை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில், Ironman & Doctor Doom கைகள் இணைவதை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால், படத்தின் அப்டேட் ஏதாவது வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 28, 2025

₹50 கட்டினால், ₹35 லட்சம் வரை கிடைக்கும்! அடடே திட்டம்

image

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 19 வயது முதல் தினமும் ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 28, 2025

TN-ன் ஒரே தீவிரவாதி கவர்னர் ரவி: அப்பாவு

image

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு தீவிரவாதி கவர்னர் ரவிதான் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். ஆளுநர் இதற்கு முன்பு பணியாற்றிய அனைத்து பகுதிகளும் தீவிரவாதிகள் நிறைந்த பகுதி என குறிப்பிட்ட அவர், TN-யிலும் அதே போன்று நடக்காதா என அவர் எதிர்பார்ப்பதாக சாடியுள்ளார். மேலும், TN-ல் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை எனவும், இங்கு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!