News January 2, 2025

தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

image

ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு இதன் அறிகுறிகளாகும். இதற்கு உரிய சிகிச்சை பெறவில்லையெனில், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்த பாதிப்பு ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

Similar News

News September 14, 2025

BREAKING: முடிவை மாற்றினார் இபிஎஸ்.. முக்கிய அறிவிப்பு

image

நாளை மறுநாள், EPS டெல்லி செல்வதால் தருமபுரி சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் தொடர்பாக, செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், EPS-ம் டெல்லி செல்ல உள்ளார். இதனால், அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தருமபுரி மாவட்ட சுற்றுப்பயணம் வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளுக்கு பதிலாக 28, 29-ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

News September 14, 2025

வருத்தம் தெரிவித்தார் விஜய்

image

பெரம்பலூரில் மக்களிடையே பேசாமல் சென்றதற்காக விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார். நிச்சயமாக மீண்டும் வேறொரு நாளில் பெரம்பலூர் மக்களை சந்திக்க வருவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். திருச்சி, அரியலூரில், தேர்தல் பரப்புரையை கேட்க வந்த தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும், பரப்புரைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததாக, அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களையும் விஜய் பாராட்டியுள்ளார்.

News September 14, 2025

BREAKING: அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகிறது

image

TN-ல் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகும் என கூறியுள்ளனர். நடப்பாண்டில் அக்டோபர் 3-வது வாரத்தில் பருவமழை தொடங்கி, ஜனவரி மாதம் வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக பருவமழைக்கு முன்பு வடிகால் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள ரெடியா?

error: Content is protected !!