News January 2, 2025
புதிதாக 25 பேரூராட்சிகள்

புதிதாக 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன. இதன்படி, முகாசி பிடாரியூர், கணியூர், அரசூர், பேரூர் செட்டிபாளையம், அத்திப்பட்டு, பாடியநல்லூர், விராலிமலை, காளையார்கோவில், ஏற்காடு, மணிவிழுந்தான், பாகலூர், பட்டணம், கூத்தப்பாடி, ராயக்கோட்டை, சூளகிரி, திருமயம், தேவிபட்டினம், ஏர்வாடி, தலைவாசல், புதியம்புத்தூர், இருங்களூர், நத்தக்காடையூர், கடம்பத்தூர், கொள்ளிடம், தோக்கவாடி. இதில் உங்க ஊர் இருக்கா?
Similar News
News December 18, 2025
வீரர்கள் Safe.. மக்களின் துயரம் தீருமா?

வட மாநிலங்களில் காற்று மாசு காரணமாக, மக்கள் சுவாசிக்கவே அவதிப்பட்டு வருகிறார்கள். இதன் உச்சமாக, லக்னோவில் நடைபெறவிருந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா T20I போட்டியும் <<18595035>>ரத்தானது<<>>. காற்றின் தரம், அதாவது AQI கிட்டத்தட்ட 490-ஐ நெருங்கியதால், போட்டி கைவிடப்பட்டுள்ளது. இனியாவது மக்கள் பாடும் துயரை அறிந்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன. இதற்கு என்னதான் தீர்வு?
News December 18, 2025
பட்டா தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

குறிப்பிட்ட நிலம், வீடு, வீட்டுமனை ஒருவருக்கு சொந்தமானது என்பதற்கான அரசு ஆவணமே பட்டா. அது தொலைந்து விட்டால், முதலில் தாசில்தாரிடம் புகார் அளிக்க வேண்டும். பின்னர் நகல் பட்டா பெறுவதற்கான விண்ணப்பத்தில் பட்டா எண், அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்து தாசில்தார் ஆபிசில் சமர்பிக்க வேண்டும். அது, VAO & வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பப்படும். விசாரணைக்கு பிறகு, ஒப்புதல் பெறப்பட்டு, நகல் பட்டா அளிக்கப்படும்.
News December 18, 2025
கலை நாயகன் காலமானார்.. கண்ணீருடன் குவியும் இரங்கல்

இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பியான ராம் சுதர் (100) வயது மூப்பு காரணமாக காலமானார். நாடாளுமன்றம் வளாகத்தில் உள்ள காந்தி சிலை, குஜராத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலை (வல்லபாய் படேல்), பெங்களூருவில் அமைந்துள்ள செழுமைக்கான சிலை (கெம்பேகவுடா) போன்றவை இவரின் கைவண்ணத்தில் உருவானவை. 2016-ல் பத்ம பூஷன் விருது பெற்ற அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


