News January 1, 2025
மன்மோகன் சிங் நினைவிட பணிகள் தீவிரம்

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க, ராஜ்காட் அல்லது கிசான் காட் பகுதியில் 1 -1.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை மன்மோகன் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் நினைவிடம் அமையும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேரு, இந்திரா காந்தி நினைவிடங்கள் உள்ள ராஜ்காட் பகுதியிலேயே நினைவிடம் அமைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News September 14, 2025
GALLERY: சிகரம் தொட்ட இசைஞானியின் விருது விழா

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் சினிமா- அரசியல் துறை பிரபலங்களும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளையராஜா ஹார்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருக்கும் சிலை ஒன்றும் அவருக்கு நினைவு பரிசாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்த போட்டோஸை DCM உதயநிதி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றை மேலே Swipe செய்து பார்க்கவும்.
News September 14, 2025
திமுகவிடம் கூடுதல் சீட் கேட்போம்: CPI

‘ஆட்சியில் பங்கு’ என்ற குரல் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்க, கூடுதல் சீட்டுகளை ஒதுக்க திமுகவுக்கு, அதன் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் உள்ளது. இந்நிலையில், CPI தரப்பிலும் கூடுதல் சீட்டுகள் கேட்கப்படும் என, அதன் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். 2021 பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில், 6 இடங்களில் CPI போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
News September 14, 2025
ஜீன்ஸ் பேண்ட் விஷயத்துல இந்த தவற பண்ணாதீங்க..

ஜீன்ஸ் பேண்ட், பல ஆடைகளுடன் சூட் ஆகும் என்பதால் தினமும் இதனை பயன்படுத்துபவர்கள் உண்டு. ஆனால், இதை 1 முறை பயன்படுத்திய உடனேயே துவைக்க போடும் பழக்கம் சிலரிடம் இருக்கிறது. அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஜீன்ஸை, 4-5 முறை அணிந்த பிறகு துவைத்தாலே போதுமானது என்கிறார்கள். துர்நாற்றம் வீசத் தொடங்கினால் மட்டும் விரைவில் துவைக்கலாம். இப்படி செய்வதால் தண்ணீரும் அதிகம் செலவாகாது.