News January 1, 2025
அரூரில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

அரூர்-தர்மபுரி சாலை வனப்பகுதியையொட்டி உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்லூரி வளாகத்தில் இருந்த, 2 பழமையான சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து, நேற்று அரூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
தருமபுரி:பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க!

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க
News November 9, 2025
தருமபுரி: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

தருமபுரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).
News November 9, 2025
தருமபுரி: கல்வி பயிலும் இடத்தில் கைவரிசை

தருமபுரி, பாலக்கோடு அருகே கடந்த, 1ம் தேதி சோமனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியரின் அறையின் பூட்டை உடைத்து, கம்ப்யூட்டர், பிரிண்டர் திருடு போனது. இந்நிலையில் வழக்கின் பெயரில் பாலக்கோடு போலீசார் பரத்குமார்(19), யோகக்குமார்(20), சேர்ந்த பார்த்-தசாரதி(20), ரமேஷ்(20), மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து. பின் அவர்கள் பயன்படுத்திய கார்கள் லேப்டாப் போன்றவைபறிமுதல் செய்தனர்.


