News January 1, 2025
உருவாகிறது 13 புதிய நகராட்சிகள்

கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல், சென்னை, மதுரை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகளின் விரிவாக்கம், காளையார்கோவில், திருமயம், ஏற்காடு உள்ளிட்ட 25 பேரூராட்சிகள் உருவாகின்றன. கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில், இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 11, 2025
இதவிட எனக்கு முக்கியமான வேலை இருக்கு: அன்புமணி

கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அன்புமணியிடம் கேட்டதற்கு, ‘இதைவிட எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது’ என பதிலளித்துள்ளார். மேலும், வழக்கறிஞர் பாலு விரிவாக இது பற்றி விரிவாக பேசுவார் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், பாமக விதிகளின் படி நிறுவனரான ராமதாஸின் அறிவிப்பு செல்லாது என பாலு கூறியுள்ளார்.
News September 11, 2025
இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம்: அரசு வார்னிங்

இந்தியர்கள் மீண்டும் ரஷ்ய ராணுவத்தில் சேர்வதாக தகவல்கள் வெளியான நிலையில், இது மிக ஆபத்தானது என இந்திய அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடன் பேசிவருவதாகவும், உடனே இந்தியர்களை விடுவிக்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் வேலை என கூறி ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர். இந்திய அரசின் முயற்சியால் அவர்களில் 98 பேர் மீட்கப்பட்டனர்.
News September 11, 2025
இமானுவேல் சேகரனாருக்கு மரியாதை செலுத்திய விஜய்

இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி, அவரின் புகைப்படத்திற்கு <<17678373>>விஜய் <<>>மரியாதை செலுத்தினார். இதுதொடர்பான போட்டோவை x பக்கத்தில் வெளியிட்ட அவர், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காக களமாடியவர் இமானுவேல் சேகரன். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை என்று பதிவிட்டுள்ளார்.