News January 1, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்தாண்டு வாழ்த்து

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இஆப தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணா, பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மாதேஸ்வன், .பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் .பெ.இராமலிங்கம், .கே.பொன்னுசாமி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி ஆகியோர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்று தெரிவித்துக்கொண்டனர்.
Similar News
News August 5, 2025
நாமக்கல்லில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (06.08.2025) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: நாமக்கல் என்.கொசவம்பட்டி என்.ஆர்.எல் திருமண மஹால், திருச்செங்கோடு ஆனங்கூர் சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மண்டபம், காளப்பநாயக்கன்பட்டி துத்திக்குளம் கலைவாணி திருமண மண்டபம், நாமகிரிப்பேட்டை வட்டாரம் ஆயில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 5, 2025
நாமக்கல்: தேர்வில்லாமல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர், சீனியர் கணக்காளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 5, 2025
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று (ஆக.5) காலை 10:30 மணியளவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.