News January 1, 2025

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் ‘லிப்ட்’ வசதி

image

திருச்செந்தூர் ரயில்நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில் முதல் நடைமேடையிலிருந்து 2-வது நடைமேடைக்கு செல்வதற்கு ‘லிப்ட் வசதி’ செய்யப்பட்டுள்ளது. இந்த லிப்ட் வசதி கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News March 26, 2026

தூத்துக்குடி: குளத்தில் சடலமாக மிதந்த சிறுவன்

image

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்தவர் மதன் (17). இவர் நேற்று முந்தினம் வெளியே சென்றவர் நேற்று காலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சிப்காட் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தேடிய போது சில்வர்புரத்தில் உள்ள மாடங்குளத்தில் அவர் சடலமாக மிதப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 26, 2026

தூத்துக்குடி: குளத்தில் சடலமாக மிதந்த சிறுவன்

image

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்தவர் மதன் (17). இவர் நேற்று முந்தினம் வெளியே சென்றவர் நேற்று காலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சிப்காட் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தேடிய போது சில்வர்புரத்தில் உள்ள மாடங்குளத்தில் அவர் சடலமாக மிதப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 26, 2026

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன்

image

தூத்துக்குடி பி அன்டி காலனியைச் சேர்ந்தவர் மவுண்ட் பேட்டன் ராஜா லாரி டிரைவர். குண்டூருக்கு மணல் ஏற்ற லாரியில் சென்ற இவர் நேற்று காலை திடீரென்று இறந்தார். இதுபற்றி தகவல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு எழுத வேண்டிய அவரது மகன் பென்னி கிப் தந்தை இறந்த சோகத்திலும் பொது தேர்வு எழுதினான். மாணவனுக்கு அனைவரும் ஆறுதல் தெரிவித்தனர்.

error: Content is protected !!