News January 1, 2025
கொலைத் தொழில் ஆட்சியை அகற்ற உழைப்போம்: ராமதாஸ்

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “அறவழி மீறி மக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரை விடக் கொடியது என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இப்போது நடக்கும் அத்தகைய ஆட்சியை அகற்ற 2025ஆம் ஆண்டில் வலிமையான அடித்தளம் அமைப்போம். நேர்மையான ஆட்சி அமைய பாமகவினர் கடுமையாக உழைக்க வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News September 11, 2025
டிரெண்டாகும் புதிய வகை ❤️காதல்❤️ இனி ‘No Pain’

Situationship, Flirtationship போன்றவற்றுக்கே அர்த்தம் புரியாத நிலையில், ‘Date them till you hate them’ என்ற புது டிரெண்ட் வந்துவிட்டது. பார்ட்னருடன் பிரச்னை ஏற்பட்டு, அது பொறுத்துக்கொள்ள முடியாத கட்டத்திற்கு போனால், சண்டை- சச்சரவு என டிராமா இல்லாமல் அமைதியாக கழண்டு கொள்ளலாமாம். இந்த பிரேக் அப் அவ்வளவு வலிக்காது என்றும், ‘அப்பாடா தப்பிச்சோம்’ என்ற உணர்வுதான் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
News September 11, 2025
பொறுப்பு DGP-க்கு எதிரான மனு தள்ளுபடி

தமிழக பொறுப்பு DGP-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை HC-ல் வழக்கு தொடரப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில்(SC) தாக்கலான வழக்கில், மாநில அரசு அனுப்பிய டிஜிபி பரிந்துரை பட்டியலை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என UPSC-க்கு ஆணையிடப்பட்டது. இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி நாங்கள் தலையிட விரும்பவில்லை என கூறி ஐகோர்ட் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
News September 11, 2025
தங்கம் விலை உயரும்போது இதை செய்யலாமா?

இந்த ஆண்டு மட்டும் தங்கம் விலை 35%-க்கும் மேல் உயர்ந்துள்ளது. விலை அதிகரிப்பு, பண்டிகை காலம் தொடக்கம், GST திருத்தம் போன்றவற்றால், நகை மீதான முதலீடு கவனம் பெறுகிறது. தங்க நகை கடை நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி, உத்திகள் மற்றும் நுகர்வோர் உணர்வைப் பொறுத்து மாறும். இதனால், திடமான அடிப்படை கூறுகள், சந்தை போக்குகளை அடிப்படையாக கொண்டு நகை பங்குகளில் முதலீடு செய்யலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.