News January 1, 2025

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் இன்று முதல் மாற்றம்

image

தெற்கு ரயில்வே 56 ரயில்களின் வேகத்தை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று(ஜன.1) முதல் நெல்லையில் இரவு 8:10 மணிக்கு இயக்கப்பட்டு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனி இன்று முதல் இரவு 8:40 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 6:40க்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இதேபோல் பிற ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என ரயில்வே தெரிவித்துள்ளது. *ஷேர்*

Similar News

News August 14, 2025

நெல்லை: பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை

image

கன்னியாகுமரியைச் சேர்ந்த தலைமை காவலர் சசிகுமார்(45), பாளையில் 15 வயது மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக கைது செய்யப்பட்டார். மாணவி பள்ளியில் “குட் டச், பேட் டச்” வகுப்பில் இது குறித்த உண்மையை வெளிப்படுத்தினார். பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஒன்ஸ்டாப் சென்டருக்கு தகவல் சென்று, புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் போலீசார் சசிகுமாரை கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

News August 14, 2025

நெல்லை: நிதி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாவட்டத்தில் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைப்பது வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விலைப் பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்து சந்தை அணுகுதலை எளிதாக்குதல் & விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த வேளாண்மை உள் கட்டமைப்பு நிதி வழங்கப்படுகிறது. விவசாயிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிப்பு. *ஷேர்

News August 14, 2025

நெல்லையில் அரசு வேலை வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்ட வருவாய்த்துறையில் 37 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க கடைசி நாள் 16-08-2025. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். *நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!