News January 1, 2025

தென்காசி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா பரிசளிப்பு விழா

image

தென்காசி மாவட்டம், பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், சார்பில் இன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு வெள்ளி விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

Similar News

News December 20, 2025

தென்காசி மாவட்டத்தில் நாளை எழுத்து தேர்வு

image

2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் நேரடி சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தென்காசி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் நாளை 21.12.2025 நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 3,335 மற்றும் பெண்கள் 1,156 என மொத்தம் 4,491 விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தேர்வு பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்,

News December 20, 2025

தென்காசி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்தவர் ராஜ நயினார் (28). இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பாப்பாகுடி இன்ஸ்பெக்டர் பரத் லிங்கம் வேண்டுகோளின் படி எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையை அடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி ராஜ நயினார் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 20, 2025

தென்காசி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

தென்காசி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0461-2340522 அணுகலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!