News December 31, 2024

மெரினா கடற்கரை முழுமையாக மூடப்பட்டது

image

புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை மாலை வரை பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளுக்கு சென்று கடலில் குளிக்கவோ, இறங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது, சென்னை மெரினா கடற்கரையை முழுவதுமாக காவல்துறை மூடியுள்ளது. மேலும், மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.

Similar News

News August 28, 2025

சென்னையில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

image

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (28.08.2025) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகின்றன. மணலி, மாதவரம், இராயபுரம், திருவிகநகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய 10 மண்டலங்களின் 10 வார்டுகளில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் இந்த முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம்.

News August 28, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட். 27) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

News August 27, 2025

சென்னை: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க வேண்டுமா?

image

சென்னையில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!