News December 31, 2024

தர்பூசணியில் திருவள்ளுவரை சிலை

image

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இழஞ்செழியன் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா பெருமையைச் சேர்க்கும் விதமாக தர்பூசணியில் திருவள்ளுவரின் திருவுருவைச் செதுக்கி அதில் வள்ளுவம் போற்றுவோம் என வாசகத்தினை எழுதியுள்ளார். இந்த காய்கனி சிற்பம் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

Similar News

News December 2, 2025

தேனியில் BSF வீரா் தூக்கிட்டு தற்கொலை

image

சின்னமனூரை சேர்ந்தவர் பொன்சங்கா் (26) மத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் கடந்த 4 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தாா். விடுமுறைக்காக சின்னமனூருக்கு வந்த இவர் நேற்று முன்தினம் தூங்க செல்வதாக கூறிச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா் கதவை உடைத்து பாா்த்தபோது பொன்சங்கா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து சின்னமனூா் போலீசார் விசாரணை.

News December 2, 2025

தேனி: அரசுக்கு கோரிக்கை வைத்த முன்னாள் முதல்வர்

image

பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். மேலும் விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து கால அவகாசத்தை டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 2, 2025

தேனி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்க வழி இருக்கு. இந்<>த ஆதார்<<>> செயலியை பதிவிறக்கம் செய்து ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண்ணை மாற்றம் செய்து கொள்ளலாம். உங்க குடும்பத்தினரின் உள்ள ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த செயலி இருந்தா ஆதார் கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!