News December 31, 2024
மாணவி வன்கொடுமை வழக்கு… தமிழக அரசிடம் NCW கேள்வி…

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், தமிழக அரசுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். பல்கலைக்கழகத்தில் நடத்திய விசாரணை குறித்து பேசிய அவர், “ஏற்கெனவே பாலியல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை எப்படி சுதந்திரமாக நடமாட அனுமதித்தார்கள். பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டோம். இது தொடர்பாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்போம்” என தெரிவித்தார்.
Similar News
News August 14, 2025
அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிவு: கவர்னர்

TN-ல் அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருவதாக RN ரவி கூறியுள்ளார். 79-வது சுதந்திர தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள உரையில் வேலைவாய்ப்பின்றி வெறும் படிப்புச் சான்றிதழ்களை பெற்றவர்களாக மாணவர்கள் திகழ்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆன பிறகும் பொதுப்பாதையை பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல் ரீதியாக தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?
News August 14, 2025
BP நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்

இதய ஆரோக்கியம் காக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் இந்த உணவுகள் உதவும்: *ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப் ஃப்ரூட் உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் *ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த மீன்கள் *பூசணி விதை *நெல்லி உள்ளிட்ட பெர்ரி வகை பழங்கள் *பிஸ்தா, பூண்டு, கேரட், செலரி, தக்காளி, பிரக்கோலி, சியா விதைகள், பீட்ரூட், ஸ்பினாச் (பசலைக் கீரை) *வாழைப்பழம் *பால், தயிர் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகள் *முழு தானியங்கள்.
News August 14, 2025
உறுப்பினரை சேர்க்க பிச்சை எடுக்கும் திமுக: EPS சாடல்

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது புகார் பெட்டியில் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என EPS கேள்வி எழுப்பியுள்ளார். ஆம்பூரில் பேசிய அவர், 45 நாள்களில் பிரச்னைகளுக்கு தீர்வு என கூறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மக்களை ஏமாற்றும் வேலை எனவும், இதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்றார். மேலும், உறுப்பினர்களை சேர்க்கவே பிச்சை எடுக்கும் ஆட்சி தொடர வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார். உங்கள் கருத்து?