News December 31, 2024

4 கிரகணங்கள்… இந்தியாவில் ஒன்றுதான் தெரியும்!

image

2025ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 4 கிரகணங்கள் தெரியவுள்ளன. ஆனால், இதில் ஒரேயொரு கிரகணம் மட்டுமே இந்தியாவிலிருந்து பார்க்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதாவது, செப். 7-8ஆம் தேதிகளில் (8:58 PM – 2:25 AM) நிகழும் முழு சந்திர கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் தென்படும். உலகளவில், மார்ச் 14இல் சந்திர கிரகணம், மார்ச் 29இல் & செப்.21-22ஆம் தேதிகளில் சூரிய கிரகணம் நிகழவுள்ளன.

Similar News

News August 23, 2025

தவெக தொண்டர்கள் 3 பேர் மரணம்.. விஜய் இரங்கல்

image

மதுரை மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்த அக்கட்சியின் தொண்டர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன், நீலகிரியை சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகரை சேர்ந்த காளிராஜ் ஆகியோரின் மறைவு மன வேதனை அளிப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்து காட்டுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 23, 2025

காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி?

image

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலை காங்., தீவிரமாக எடுத்து வருகிறதாம். அதன் பின்னணியில் TVK கூட்டணியில் 70 தொகுதிகள், DCM பதவி ஆஃபர் இருப்பதாக கூறப்படுகிறது. 1989-ல் தனித்து போட்டியிட்டு 26 தொகுதிகளில் வென்ற காங்., அந்த தொகுதிகளையும், 2-வது இடம் வந்த தொகுதிகளையும் கேட்க உள்ளதாம். DMK கூட்டணியில் உள்ள காங்., தலைவர்கள் அண்மை காலமாக ஆட்சியில் பங்கு கோரிக்கையை தீவிரமாக பேசி வருவது கவனிக்கத்தக்கது.

News August 23, 2025

இலங்கை முன்னாள் அதிபர் ஹாஸ்பிடலில் அட்மிட்

image

முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு நிதியை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய வழக்கில் ரணில் நேற்று கைது செய்யப்பட்டார். ஆக.26 வரை ரிமாண்டில் வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு BP, சர்க்கரை அதிகரித்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது கொழும்பில் உள்ள நேஷனல் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!