News December 31, 2024
மயிலாடுதுறை: 6,712 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் இணையவழி மோசடி மூலம் களவு போன ரூ.9,39,323 தொகை மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பல்வேறு தலைப்புகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட முழுவதும் 6,712 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விபரப்பட்டியல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலிசாரின் விவரங்கள் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட இடங்களில், இன்று இரவு 11மணி முதல் நாளை காலை 6 மணிவரை ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கை குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News September 18, 2025
சீர்காழி அரசு மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியீடு

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதில் கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் நடுக்கம் ஏற்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனையை சார்பில், ஒரு பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காய்ச்சல் நடுக்கம் ஏற்பட்ட 27 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு மாற்று மருந்து கொடுத்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
News September 18, 2025
மயிலாடுதுறை: ரூ.62,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

மயிலாடுதுறை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..