News December 31, 2024
பழனியில் காணிக்கை ரூ.4.67 கோடி

பழனி முருகன் கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடக்கிறது. இந்த மாத டிச.26, 30 இரு நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.4 கோடியே 67 லட்சத்து 49 ஆயிரத்து 356, வெளிநாட்டு கரன்சி 1,069, தங்கம் 1.012 கிலோ, வெள்ளி 17.062 கிலோ கிடைத்தது என பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
பழனி அருகே பயங்கரம் 9 பேர் படுகாயம்!

பழனி அருகே தும்பலப்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அருகிலுள்ள குட்டையில் மாடுகளைக் குளிப்பாட்டச் சென்றனர். அப்போது திடீரென அங்குள்ள பாறையில் இருந்து கலைந்து வந்த கதம்ப வண்டுகள் கிராம மக்களை விரட்டி விரட்டி கடித்தன.இதில் சிறுமிகள் உட்பட 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தகவலறிந்த அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று ஆறுதல் கூறி, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்
News January 17, 2026
சின்னாளப்பட்டியில் ரயில் விபத்து – ஒருவர் பலி

சின்னாளப்பட்டி முருகன்பட்டி ரயில்வே மேம்பாலத்தில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் சரக்கு ரயில் உரசியதில் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 17, 2026
திண்டுக்கல்: வீட்டில் ஹீட்டர் தீ விபத்து !

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பாப்பாத்தி வீட்டில் விக்னேஷ் தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், இரவு 7 மணியளவில் குளியலறை ஹீட்டரில் அதிக மின்சாரம் காரணமாக தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தினர் தகவலால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.வாஷிங் மெஷின் உள்ளிட்ட சில வீட்டு உபகரணங்கள் எரிந்து நாசமாகின.


