News December 31, 2024
சாதனை படைப்பாரா ஜெய்ஸ்வால்?

ஆஸி.,க்கு எதிரான 5ஆவது டெஸ்டில் மேலும் 84 ரன்கள் எடுத்தால், ஒரு ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைப்பார். 2024இல் இதுவரை 1,478 ரன்களை எடுத்துள்ள அவர், அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளார். முன்னதாக, 2010இல் சச்சின் 1,562 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், 1979இல் கவாஸ்கர் 1,555 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
Similar News
News March 14, 2026
தேமுதிகவால் விசிகவுக்கு வந்த சிக்கல்

தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்க நினைப்பதால், ஏற்கெனவே கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிகவுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், இதற்கு இருகட்சிகளும் இசைவு கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், திருமாவளவன் கேட்ட 10 தொகுதிகளில் 5 சீட் மட்டுமே கொடுக்க திமுக முடிவு செய்துள்ளதால், விசிகவினர் அதிருப்தியில் உள்ளனராம்.
News March 14, 2026
திமுக மா.செ.,க்கள் கூட்டம் தள்ளிவைப்பு

திமுக மா.செ.,க்கள் கூட்டம் நாளை (மார்ச் 15) நடைபெறவுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், மார்ச் 16-ல் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. நாளை தமிழக தேர்தல் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளதால், இந்த தள்ளிவைப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், மீதமுள்ள கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டையும் முடித்துவிட்டு, மொத்தமாக மா.செ.,க்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கலாம் என்றும் திமுக நினைக்கிறதாம்.
News March 14, 2026
சிலிண்டர்.. காலையிலேயே மகிழ்ச்சி அறிவிப்பு

வணிக சிலிண்டரைத் தொடர்ந்து வீட்டு உபயோக சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவலால், பொதுமக்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில், சமையல் சிலிண்டர் தொடர்பாக பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம்; அதன் உள்நாட்டு உற்பத்தி 30% அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். மேலும், தேவை இருந்தால் மட்டுமே ஆன்லைனில் சிலிண்டரை முன்பதிவு செய்யவும் கேட்டுக்கொண்டார்.


