News December 30, 2024

பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு!

image

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான அரசு மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு நிரந்தர ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில், இப்பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் மாத சம்பளமாக ரூ. 11,970 பெற்று வந்த நிலையில், அது தற்போது ரூ.14,150ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்காலிக ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

கோவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்.

News March 11, 2026

தமிழர் விரோத திமுக ஆட்சிக்கு முடிவுரை: பியூஷ் கோயல்

image

திருச்சியில் நடைபெறவுள்ள NDA கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தபின் பேசிய பியூஷ் கோயல், தமிழக மக்கள் மாற்றத்தையும், நல்லாட்சியையும் விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். உதயநிதியின் தமிழர் விரோத கலாச்சாரம், தமிழர் விரோத போக்கு மற்றும் ஸ்டாலின் அரசின் ஊழலை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் விரும்புவதாகவும், EPS தலைமையிலான NDA கூட்டணிக்கு தமிழகத்தில் ஆதரவு அலை வீசுவதாகவும் தெரிவித்தார்.

News March 11, 2026

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சில டிப்ஸ்!

image

*படிக்கும்போது முக்கிய Formulas அனைத்தையும் எழுதி படிப்பது மனதில் ஆழப் பதியும். *தேர்வு நாள்களில் சரியான நேரத்தில் சாப்பாடு, 6-7 மணி நேரம் தூங்குவது ஞாபக சக்தியை அதிகரிக்கும். *தேர்வுக்கு முன் பதற்றத்தைத் தவிர்க்க <<8036229>>Breathing Exercise<<>> பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்தும். *தேர்வு சமயத்தில் TV, செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள். வாழ்த்துகள்! SHARE IT.

error: Content is protected !!