News December 30, 2024
கைதான தவெகவினரிடம் விஜய் சொன்ன வார்த்தை!

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை தொடர்பாக விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை, பொதுமக்களிடம் விநியோகித்ததாக புஸ்ஸி ஆனந்த் உட்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், 2 மணிநேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் விஜய் போனில் பேசினார். அப்போது “தைரியமாக இருங்கள்.. நான் எப்போதும் உங்களுடன்தான் இருக்கிறேன்” என விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 11, 2025
அன்புமணி தனி கட்சி தொடங்க ராமதாஸ் அட்வைஸ்

பாமக தனது உழைப்பால் உருவான கட்சி என்பதால் மகன் உள்ளிட்ட யாருக்கும் அதில் உரிமை இல்லை என ராமதாஸ் தடாலடியாக அறிவித்துள்ளார். சொந்த குடும்பத்திலேயே வேவு பார்க்கும் கேவலமான செயலை செய்த அன்புமணி, வேண்டுமானால் தனி கட்சி தொடங்கி கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார். பாமகவில் அன்புமணியின் குடும்பத்தினர் தனியாக ஒரு கட்சியை நடத்தியதாகவும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
News September 11, 2025
இனி ‘இரா’ இன்ஷியல் மட்டுமே: ராமதாஸ்

<<17675629>>அன்புமணியை <<>>பாமகவில் இருந்து ராமதாஸ் நீக்கியுள்ளார். இதனையடுத்து அவருடன் தொடர்புகொள்ளும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமதாஸ் எச்சரித்துள்ளார். மேலும், ‘இரா’ என்ற இன்ஷியலை தவிர, எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ளார். பாமகவை அழிப்பதற்கு அன்புமணி முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், தான் இல்லாமல் அவர் வளர்ந்திருக்க முடியாது என பேசினார்.
News September 11, 2025
பட்டத்தை தக்கவைத்த எலான் மஸ்க்; மீண்டும் முதலிடம்

Oracle நிறுவன பங்குகளின் விலை உயர்ந்ததால், $393 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட அதன் உரிமையாளர் லாரி எல்லிசன் NO.1 பணக்காரராக அறிவிக்கப்பட்டார். இதனால் $385 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட எலான் மஸ்க் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆனால், Oracle பங்குகள் விலை நேற்று இரவு சரிவை சந்தித்ததால், லாரி எல்லிசனின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. எனவே, எலான் மஸ்க் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.