News December 30, 2024
சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் வாக்குமூலம்

திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாதகவினர் சிலர் வலைதளங்களில் மோசமாக விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சீமான் உள்ளிட்டோர் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜரான வருண்குமார், நாதகவினருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார்.
Similar News
News April 4, 2026
IPL : இன்று MI Vs DC

IPL-ல், இன்று MI, DC அணிகள் டெல்லியில் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் 37 முறை நேருக்கு நேர் மோதியதில் 21 முறை MI, 16 முறை DC வெற்றி பெற்றுள்ளன. பந்துவீச்சில் இரு அணிகளும் சமபலத்துடன் இருந்தாலும், பேட்டிங்கில் MI அணியே வலுவாக காணப்படுகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான டெல்லி ஆடுகளத்தில் MI வீரர்களின் அதிரடியை DC பவுலர்கள் கட்டுப்படுத்துவதை பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். யார் ஜெயிக்க வாய்ப்பு?
News April 4, 2026
சர்ச்சை ஆடியோ.. ஆ.ராசா Vs மாரிதாஸ்

ஆ.ராசா MP பேசியதாக யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்ட <<19548289>>ஆடியோ<<>> அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதை பிரசாரத்தில் சுட்டிக்காட்டி பேசிய EPS, கருணாநிதியை ஸ்டாலின் கைதி போல நடத்தியிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போலியான ஆடியோவை வெளியிட்டதற்கு மாரிதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆ.ராசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், ஆதாரம் இருப்பதால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என மாரிதாஸ் பதிலளித்துள்ளார்.
News April 4, 2026
காங்., வேட்பாளர் பட்டியல்.. ஜோதிமணி புலம்பல்

கட்சிக்காக உழைத்தவர்களை விடுத்து, புதியவர்களுக்கு சீட் தரப்பட்டுள்ளதாக ஜோதிமணி கூறியுள்ளார். வேட்பாளர் பட்டியலில் கொங்கு வெள்ளாள கவுண்டர் & அருந்ததியினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும், 2 பெண்களுக்கு மட்டுமே சீட் தந்திருப்பது காங்.,-ன் சமூகநீதி கோட்பாட்டுக்கு எதிரானது என அவர் X-ல் பதிவிட்டுள்ளார். TN-ன் எதிர்காலத்தை கருதி, இதுபற்றி வாக்குப்பதிவு பிறகு விரிவாக பேசுவேன் என கூறியுள்ளார்.


