News March 25, 2024

விழுப்புரம்: கானா பாடகர் மீது தாக்குதல்

image

திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை கிராமத்தை சேர்ந்த கானா பாடகர் நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். ஜக்காம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அன்பு தனது சொந்த வேலை காரணமாக மேல்மருவத்தூர் சென்று திரும்புகையில் சலவாதி அருகே மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை ரோசனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 31, 2025

விழுப்புரம்: பெற்ற தந்தைக்கு மகன் கொலைமிரட்டல்!

image

விழுப்புரம்: மேல் காரனையைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவர் தனது மகள் அபிராமிக்கு, 20 வருடங்களுக்கு முன்பு தனது 2 ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்துள்ளார். இந்நிலையில், அவரது மகன் மோகன் அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி கேட்டு கலியபெருமாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் மோகனை கைது செய்தனர்.

News December 31, 2025

விழுப்புரத்தில் உயிரோடு எரிக்கப்பட்ட கன்றுக்குட்டிகள்!

image

விழுப்புரம்: திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (38). இவருக்கும், உறவினரான ஏழுமலை குடும்பத்தினருக்கும் நிலம் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஏழுமலை குடும்பத்தினர் விநாயகமூர்த்தியின் நிலத்தில் உள்ள மாட்டுக்கொட்டகையை தீ வைத்து எரித்தனர். இதில் 2 கன்றுகுட்டிகள் பரிதாபமாக உயிரோடு கருகி பலியாகின. இந்த வழக்கில் ஏழுமலை குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

News December 31, 2025

விழுப்புரம்: பஸ் டயரில் சிக்கி மூதாட்டி பலி!

image

மரக்காணம் அடுத்த கோமுட்டிச்சாவடி குப்பத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி செந்தாமரை (70). இவர், அனுமந்தை இ.சி.ஆர்., ஓரத்தில் கொட்டகை அமைத்து மீன் விற்பனை செய்து வருகிறார்.நேற்று முன்தினம், புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து மீன் கடையில் புகுந்தது. இதில் செந்தாமரை பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!