News December 30, 2024
ஒரே நாளில் பதவி உயர்வு பெற்ற IPS ஜோடி

IPS ஜோடியான <<15015653>>வருண்குமார்<<>>, வந்திதா பாண்டே இருவரும் ஒரே நாளில் DIGஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 2011 பேட்ச்சை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அருகருகே உள்ள திருச்சி – புதுக்கோட்டை மாவட்டங்களில் SPக்களாக பணியாற்றி வந்த நிலையில், இனி முறையே திருச்சி – திண்டுக்கல் சரக DIGகளாக பணியாற்ற உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட கட்சியினரால் சமூக வலைதள தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 10, 2026
மீண்டும் திமுக கூட்டணியில் பஞ்சாயத்து

திமுக கூட்டணியில் மீண்டும் தொகுதிப் பங்கீட்டு பிரச்னை வெடித்துள்ளது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவிற்கு தற்போது 4 சீட் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறிவிட்டதாம். இதனையடுத்து, அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என்று வைகோ சற்றுமுன் அறிவித்துள்ளார். அக்கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து, கடைசி நேரத்தில் கூட்டணி கூட மாறலாம் என கூறப்படுகிறது.
News March 10, 2026
விவசாயிகளுக்கு 80% மானியம் தரும் அரசு திட்டம்

விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வாங்க SMAM Subsidy Scheme மூலம் மத்திய அரசு 40% – 80% வரை மானியம் வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது www.agrimachinery.nic.in -ல் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மாநில வேளாண்மைத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும் & சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். நீங்கள் தகுதி பெற்றால் Mobile No.-க்கு SMS வரும். SHARE.
News March 10, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்? அண்ணாமலை கூறினார்

தவெகவுடன், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் உடனான கூட்டணி பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் ஏற்கெனவே இல்லை என விளக்கம் அளித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னதாக, AP DCM பவன் கல்யாண் மூலமாக NDA தரப்பு விஜய்யுடன் பேசி வருவதாக நேற்று பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


