News December 30, 2024
தனியார் வங்கிகளில் பணி விலகல் விகிதம் அதிகரிப்பு

தனியார் வங்கிகளில் பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது அதிகமாக உள்ளது என RBI தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வேலையிலிருந்து விலகுவோர் விகிதம் சராசரியாக 25% என்ற அதிகபட்ச அளவில் உள்ளது. இது, வங்கி செயல்பாட்டு அபாயங்களை ஏற்படுத்துவதால், பணியாளர்கள் விலகலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தனியார் வங்கிகளை RBI வலியுறுத்தியுள்ளது.
Similar News
News August 15, 2025
மழை வெளுத்து வாங்கப் போகுது.. கவனமா இருங்க!

இன்று இரவு 10 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஆக. 21-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நாளை வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க நண்பர்களே!
News August 15, 2025
தேச வளர்ச்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்: PM

இல.கணேசனின் மறைவு செய்தி தனக்கு வலியை தந்ததாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க கடுமையாக பணி செய்ததாகவும், தேசத்தின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த தேசியவாதியாக அவர் நினைவுகூரப்படுவார் என்றும் இரங்கல் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் எனவும் இல.கணேசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
News August 15, 2025
இந்தியா வரும் ரொனால்டோ? ரசிகர்களுக்கு HAPPY NEWS!

கால்பந்து GOAT ரொனால்டோ இந்தியாவில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘AFC சாம்பியன்ஸ் லீக் 2’ போட்டியில் ரொனால்டோ விளையாடும் சவுதி கிளப்பான அல்-நாசர், இந்தியாவின் கோவா FC இரண்டும் ஒரே பிரிவில் (Group D) இடம்பெற்றுள்ளன. எப்படியும் இரண்டு அணிகளுக்கு இடையே ஒரு ஆட்டமாவது இந்தியாவில் நடைபெறும். அந்த போட்டிக்கு ரொனால்டோ ஆப்சென்ட் ஆகாமல் இருந்தால், ரசிகர்களுக்கு விருந்து நிச்சயம்!