News December 30, 2024
இருண்ட டிசம்பர்.. 236 பேர் பலி

2024 டிசம்பர் மாதத்தில் நடந்த விமான விபத்தில் மட்டும் இதுவரை 236 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் இன்று நடந்த விபத்தில் 176 பேர் மாண்டனர். அதேபோல், கடந்த 25ஆம் ஆண்டு அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் விபத்துகுள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 4 உலக நாடுகளில் 19 பேர் பலியாகினர். இது விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
Similar News
News August 16, 2025
ராசி பலன்கள் (16.08.2025)

➤ மேஷம் – நலம் ➤ ரிஷபம் – நன்மை ➤ மிதுனம் – நற்செய்தி ➤ கடகம் – தடங்கல் ➤ சிம்மம் – ஆர்வம் ➤ கன்னி – சாந்தம் ➤ துலாம் – செலவு ➤ விருச்சிகம் – குழப்பம் ➤ தனுசு – வெற்றி ➤ மகரம் – விவேகம் ➤ கும்பம் – இரக்கம் ➤ மீனம் – இன்பம்.
News August 16, 2025
கோலி மட்டும் அப்படி செய்தால்.. ஸ்ரீசாந்த் உறுதி

கோலியின் Aggression தான் அவரது முழு பலம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். கோலியின் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை தான் அவரது இன்றைய வெற்றிக்கு காரணம் எனவும், அவர் தனது Aggressive மனப்பான்மையை குறைத்தால், வெற்றிகரமான வீரராக இருந்திருக்க மாட்டார் என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். மேலும், அது கோலியின் கோபமல்ல, கிரிக்கெட் மீதான Passion என்று தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
சிறுவயது வறுமை… மனம் திறந்த ஜாக்கி சான்

குழந்தை பருவத்தில், தன் குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்ததாக ஜாக்கி சான் மனம் திறந்து பேசியுள்ளார். என்னை 250 டாலருக்கு விற்க என் தந்தை தயாராக இருந்தார். ஆனால், நண்பர்கள் தடுத்ததால் நான் தப்பித்தேன். அதன்பின் 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து, சிறு சிறு வேடங்கள் நடித்து, 17 வயதில் ஸ்டண்ட் மேன் ஆனேன் என்றார் ஜாக்கி. இப்போது ஜாக்கி சான் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ₹4,900 கோடி!