News December 29, 2024
பல்கலை.களில் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு

அண்ணா பல்கலை. சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் அனைத்து பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் வெளிநபர்களுக்கு அனுமதியில்லை என்றும், ஆதலால் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஆணையிட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
அண்ணாமலை கேட்கும் தொகுதியை கொடுக்காத EPS

வரும் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதிதான் தர முடியும்; வேண்டுமானால், கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட பல்லடம் தொகுதியில் போட்டியிடட்டும் என EPS கூறுகிறாராம். அதேபோல், வேளச்சேரியில் போட்டியிட தமிழிசை விரும்பும் நிலையில், விருகம்பாக்கம் (அ) மயிலாப்பூர் தொகுதியை கொடுக்க EPS முன்வந்துள்ளாராம்.
News March 14, 2026
தமிழ்நாடு தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

TN உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க நாளை வரை ECI அவகாசம் வழங்கியுள்ளது. அதேபோல், பிஹார், ஒடிசா, ஹரியானாவில் ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதனால், நாளை தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பில்லை; 16-ம் தேதிக்கு பிறகே அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
News March 14, 2026
மார்ச் 16-ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, மார்ச் 16-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், இதுவரை தொகுதி உடன்பாடு முடிவாகவில்லை. சீட் பேரத்தில் இழுபறி நீடிப்பதாலேயே பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும், பாஜகவுக்கு EPS பிடி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


