News December 29, 2024

உண்டியலில் இருந்த விநோத 20 ரூபாய்.. இவ்வளவு வன்மமா?

image

கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற பாக்யவந்தி கோயில் உண்டியலை நேற்று திறந்து பார்த்த ஊழியர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அந்த உண்டியலில் ரூ.60 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம் இருந்துள்ளது. அது விஷயம் அல்ல. அதிலுள்ள ஒரு 20 ரூபாய் நோட்டில், “எனது மாமியார் சீக்கிரம் சாக வேண்டும்” என எழுதப்பட்டிருந்தது. இதை போட்டது ஆணா, பெண்ணா எனத் தெரியவில்லை. இருந்தாலும், இவ்வளவு வன்மம் ஆகாதுங்க.

Similar News

News July 11, 2025

மினிமம் பேலன்ஸ் இல்லையா.. BOB வங்கியில் சலுகை

image

சாதாரண சேமிப்பு கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் தொகை பராமரிக்கவில்லையேல் பேங்க் ஆப் பரோடா (BOB ) அபராதம் விதித்து வந்தது. இந்நிலையில், அந்த வங்கி தற்போது மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் இனி கவலை கொள்ள வேண்டாம், அபராதம் விதிக்கப்படாது என அறிவித்துள்ளது. இந்த நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், ஆனால் இது ப்ரீமியம் சேமிப்பு கணக்குகளுக்கு பொருந்தாது எனவும் BOB கூறியுள்ளது.

News July 10, 2025

கோவை குண்டுவெடிப்பு: பறிபோன 58 உயிர்கள் REWIND

image

1998. பிப்.14. கோவை தொடர் குண்டுவெடிப்பால் தமிழகமே அதிர்ந்து போன தினம். இந்த சம்பவத்தில் 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 58 பேர் உயிரிழந்தனர். தேர்தல் பிரசாரத்துக்கு அத்வானி கோவைக்கு வரப் போகும் சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கொடூர குற்றத்தில் முக்கிய குற்றவாளியான சாதிக் (எ) டெய்லர் ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், பறிபோன 58 உயிர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்?

News July 10, 2025

பட்டாவில் அதிரடி மாற்றம்… விரைவில் புதிய நடைமுறை

image

இ- பட்டாவில் போட்டோவை இணைக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த திட்டத்தை கொண்டுவர இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். eservices.tn.gov.in இணையதளத்தில் மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு இ- பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம். SHARE IT.

error: Content is protected !!