News December 29, 2024

ஈரோட்டில் நகைக்காக கொலை: மூவர் கைது

image

ஒலகடம் பகுதியைச் சேர்ந்தவர் டெல்லி செல்வராஜ் (70), டெல்லியில் இவர் துணி வியாபாரம் செய்து வந்தார். ஒலகடத்தில் தனியாக தங்கி இருந்தபோது கடந்த 15 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். நகைக்காக கொலை செய்த குற்றத்திற்காக அசோக்குமார் (24), திலீபன் (20) மற்றும் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

Similar News

News August 15, 2025

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினவிழா

image

ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. காலை 9:05 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின், அணிவகுப்பு மரியாதை, சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் கவுரவிப்பு, சிறந்த அரசு பணியாளர்கள் பாராட்டு, நலத்திட்ட உதவி, அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

News August 15, 2025

ஈரோடு: B.E முடித்தால் சூப்பர் வேலை!

image

ஈரோடு: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 15, 2025

ஈரோட்டில் பெண்ணிடம் நகை பறிப்பு!

image

ஈரோடு: பழையபாளையம் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்த நந்தினி கடந்த 25ஆம் தேதி வெளியே சென்ற போது ஒருவர் இவருடைய நகையை பறித்து சென்றார். சூரம்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நகை பறித்த திருடனை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று(ஆக.14) பெங்களூரில் பதுங்கி இருந்த ஜே.பி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (35) என்பவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டு சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!