News December 29, 2024
விஜய் போல தெளிவு யாருக்கும் கிடையாது: கிச்சா சுதீப்

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் கிச்சா சுதீப், தற்போது ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘மேக்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “விஜய் சார் பெரிய கனவு காண்பவர். அவரைப் போல தெளிவு யாருக்கும் கிடையாது. என்ன, எப்போது செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும். அதை அவர் மிக துல்லியமாக செய்வார்” என்று பாராட்டினார்.
Similar News
News March 13, 2026
ரஜினி மிரட்டலுக்கு அஞ்சுபவர் இல்லை: நற்பணி மன்ற மா.செ.

ரஜினியின் அரசியல் குறித்து <<19363014>>ஆதவ் அர்ஜுனா<<>> பேசியதற்கு ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் சோளிங்கர் மா.செ., N.ரவி பதிலடி கொடுத்துள்ளார். கொரோனா தொற்று உயிர் இழப்புகளை தவிர்க்கவே அந்நேரத்தில் அரசியலுக்கு வரவில்லை என ரஜினி அறிவித்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மற்றவர்கள் மிரட்டலுக்கு அஞ்சுபவர் இல்லை எனவும், தனது பலத்தை நிரூபிக்க உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
எந்த மதமும் வெறுப்பை கற்பிக்கவில்லை: ஃபரூக்

தன்னை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற நபர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மயிரிழையில் உயிர்தப்பிய ஜம்மு காஷ்மீர் Ex CM ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். இச்சம்பவத்திற்கு பின்னர் அமித் ஷா போனில் தன்னை தொடர்புகொண்டு விசாரித்ததாக கூறினார். தற்போது நாட்டில் நிலவும் வெறுப்பு பிரசாரத்தால் இதுபோன்று தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எந்த மதமும் வெறுப்பை கற்பிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
News March 13, 2026
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காணும் ஒன்று அல்ல, கனவு என்பது உங்களை தூங்கவிடாமல் செய்வது. *சூரியனைப் போல் பிரகாசிக்க விரும்பினால், முதலில் நீங்கள் சூரியனைப் போல் எரிய வேண்டும். *வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தால், தோல்வி ஒருபோதும் வெல்லாது. *பெரிய கனவு காண்பவர்களின் பெரிய கனவுகள் எப்போதும் உயர்ந்த நிலையை அடையும். *வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்!


