News December 29, 2024
அரசு பஸ்களில் விபத்தை தடுக்க புதிய முயற்சி

தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. டூவீலரில் செல்வோர் பஸ்களை முந்த முயலும் போது சில நேரங்களில் தவறி பஸ் டயர்களில் விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக அரசின் உத்தரவின் பெயரில் தேனி மாவட்டத்தில் உள்ள 140 அரசு பேருந்துகளில் சேஃப் கார்டுகள் எனக்கூடிய தடிமனான ரப்பராலான பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
தேனி: நிதி நிறுவனத்தில் ரூ.16.05 லட்சம் மோசடி

கம்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அதன் மேலாளர் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். நிதி நிறுவனத்தின் வங்கி வரவு, செலவுகளை ஆய்வு செய்தபோது 238 வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு செலுத்திய ரூ.16,05,366 ஐ அங்கு பணிபுரியும் களப்பணியாளர்கள் சம்பத்குமார் (34), பிரவீனா (29) ஆகியோர் கையாடல் செய்தது தெரிந்தது. இதுகுறித்து இருவர் மீதும் போலீசார் நேற்று (நவ.11) வழக்கு பதிவு.
News November 12, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (11.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News November 11, 2025
தேனி: விஷ பூச்சியால் பறிபோன இளைஞர் உயிர்

உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (32). இவர் நேற்று முன்தினம் அவரது தோட்டத்தில் இருந்த பொழுது விஷப்பூச்சி ஒன்று அவரை கடித்துள்ளது. அவரை மீட்ட உறவினர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று (நவ.10) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.


