News December 29, 2024
திருப்பூரில் பைனான்ஸ் உரிமையாளர் மீது வழக்கு

திருப்பூர் டும்பைலட் மைதானம் பகுதியில், பிரகாஷ் என்பவர், பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சண்முகசுந்தரம் என்பவர், பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடனை அசலும் வட்டியுடன் திருப்பி செலுத்திய நிலையில், பத்திரத்தை திருப்பி தராமல் அதனை கிரயம் செய்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில் பிரகாஷ் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
திருப்பூர் மாநகரில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தினரால் விநியோகம் செய்யப்படும் பிரதான குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே வருகிற 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்களில், இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அமீத் கூறியுள்ளார்.
News August 22, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 22.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம், ஊதியூர், செய்யூர், குன்னத்தூர், பெருமாநல்லூர், அவினாசிபாளையம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணிபுபவரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News August 22, 2025
திருப்பூர் மக்களே முற்றிலும் இலவசம்!

திருப்பூரில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, காளான் வளர்ப்பு (ம) அதன் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சூப், பிரியாணி, பிஸ்கட் தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 9489043923 என்ற எண்னை அழைக்கவும். SHAREit