News December 29, 2024
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு எப்போது?

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக தாமதம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. புத்தாண்டு நெருங்கும் வேளையில், DA உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு 2025 ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி அறிவிப்பு அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தரவுகளின் அடிப்படையில் அமைவதால் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
தவெகவில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
News July 10, 2025
276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை

தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரயில்வே கேட்களில் <<17013093>>இன்டர்லாக்<<>> அமைப்புகள் நிறுவப்படும் எனக் கூறியுள்ளனர். அதேநேரம், தெற்கு ரயில்வேயில் ஆளில்லாத ரயில்வே கேட்களே இல்லை என்றும் உறுதியளித்துள்ளனர். கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News July 10, 2025
பாலியல் புகாரளித்த நடிகை… சிக்கும் சாமியார்

இந்திய வம்சாவளி நடிகை மலேசியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செபாங் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நடிகை லிசால்லினி கனரன் சென்றபோது, அங்கிருந்த சாமியார் அவரது மார்பை தொட்டுள்ளார். பின்னர் நடிகை மீது நீரை தெளித்துள்ளார். ஜூன் 21-ல் நடந்த இந்த சம்பவம் குறித்து நடிகை லிசால்லினி போலீஸ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தலைமறைவான சாமியாரை போலீஸ் தேடி வருகிறது.