News December 28, 2024
மதுக்கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன்? நீதிமன்றம் கேள்வி

மதுக்கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன் என்று மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அருகிலும் மதுக்கடைகள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. மதுக்குடிப்பதால் உடல் நலனுக்கு கேடு என விளம்பரம் வெளியிடுவதை சுட்டிக்காட்டி, மதுக்கடைகளை அதிகரித்துவிட்டு அந்த விளம்பரத்தை வெளியிடுவதால் என்ன பயன் எனவும் நீதிமன்றம் வினவியது.
Similar News
News September 12, 2025
முடி கொட்டுதா? குளிக்கும்போது இதெல்லாம் பண்ணாதீங்க!

➤சூடான நீரில் குளிப்பது தலை முடிக்கு நல்லதல்ல. ➤தலைக்கு நேரடியாக ஷாம்பு பயன்படுத்த வேண்டாம். அதனை தண்ணீரில் கலந்த பிறகு தலையில் தேய்க்கவும். ➤சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. ➤தலைக்கு குளிப்பதற்கு முன், தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் முடியின் வேர் பலப்படும். ➤குளித்த பிறகு துண்டால் முடியை அழுத்தி தேய்க்க வேண்டாம். SHARE IT.
News September 12, 2025
தொண்டர்களுக்கு தவெக போட்ட ரூல்ஸ்

மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் இருந்து விஜய் நாளை தொடங்குகிறார். தொண்டர்கள் சில நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு தவெக அறிவுறுத்தியுள்ளது. *விஜய்யின் வாகனத்தை பின்தொடர கூடாது *அனுமதியின்றி அலங்கார வளைவுகள், பேனர்கள் வைக்கக் கூடாது* கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்கு வர வேண்டாம் *மரங்கள் மீது ஏறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (பிரசார வாகன போட்டோஸ் மேலே கொடுக்கப்பட்டுள்ளது)
News September 12, 2025
BREAKING: அண்ணாமலை விலகலா? பாஜகவில் சலசலப்பு

பதவி மாற்றப்பட்டதில் இருந்தே, அண்ணாமலை அமைதியான போக்கை கடைபிடித்து வருகிறார். அண்மையில், <<17671440>>திமுகவை பாராட்டி<<>> பேசிய அவர், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நிலம் வாங்கியதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக என்பதை எங்கேயும் குறிப்பிடவில்லை. Ex IPS என்றே குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் கட்சியில் இருந்து விலகுகிறாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுந்துள்ளது.