News March 25, 2024

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

image

உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமை நிர்வாகி செர்ஹெய் போப்கோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “மேற்கு உக்ரைனை தாக்கும் நோக்கில் கடந்த நான்கு நாள்களில், மூன்றுமுறை ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. போலந்து வான்வழியில் செலுத்தப்பட்ட இந்த ஏவுகணைகளால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை” என்றார்.

Similar News

News April 29, 2025

BREAKING: இந்தியா த்ரில் வெற்றி

image

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான ODI-ல், இந்திய மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. IND-SL-SA இடையிலான முத்தரப்பு ODI தொடர் இலங்கையில் நடந்துவருகிறது. முதல் ஆட்டத்தில் SL-ஐ வீழ்த்திய IND, இன்று நடந்த 2-வது ஆட்டத்தில் 50 ஓவர்களில் 276/6 ரன்கள் குவித்தது. பிரதிகா ராவல் 78 ரன்கள் குவித்தார். 277 ரன் இலக்கை விரட்டிய SA, 261 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.

News April 29, 2025

தகிக்கும் கோடையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

image

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் உங்களது உடல்நலனை காக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. *நாள்தோறும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் அருந்துதல். *உச்சி வெயிலில் (காலை 11 – மாலை 3) வரை தேவையின்றி வெளியே செல்லாமல் இருங்கள். *உடல் வெப்பநிலையைத் தணிக்க இருமுறை குளியுங்கள்.* பருத்தி ஆடைகளை அணியுங்கள்.* எண்ணெய், கொழுப்பு உணவுகளைத் தவிருங்கள். *செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும். SHARE IT.

News April 29, 2025

IPL லாபத்தில் 10 IIT-கள் கட்டலாம்: ஷாக் ரிப்போர்ட்

image

3 ஆண்டுகளில் IPL லாபத்திற்கு 40% வரி விதிக்கப்பட்டிருந்தால் ₹15,000 கோடி கிடைத்திருக்கும், இதன் மூலம் 10 ஐஐடிக்கள் (அ) தேசிய உள்ளார்ந்த தொழில்நுட்ப நிதியை உருவாக்கியிருக்கலாம் என IISc பெங்களூரு பேராசிரியர் மயங்க் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். IPL டீம் உரிமையாளர்கள் கூடுதலாக ₹480 கோடி வரை ஈட்டியிருந்தால், ஒவ்வொரு ஆண்டும் ₹6,000 கோடியை ஆராய்ச்சி பணிகளுக்கு அளித்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!