News December 28, 2024
ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்த படகு: 3 பேர் காயம்

விழுப்புரம் கோட்டக்குப்பம் அருகே ராட்சத அலையில் பைபர் படகு சிக்கி கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். படகின் இன்ஜின் திடீரென நின்றதாலும் படகை இயக்க முடியாமல் மீனவர்கள் திணறினர். கரையில் இருந்தவர்கள் கயிற்றின் உதவி மூலம் 3 பேரையும் காப்பாற்றினர். இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை ஒதுங்கிய படகை கயிறு மூலம் இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.
Similar News
News March 8, 2026
விழுப்புரம்: மகளிருக்கு இந்த எண் அவசியம்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
விழுப்புரத்தில் தட்டித் தூக்கிய திமுக!

மயிலம் சட்டமன்ற தொகுதி, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் அதிமுக விளங்கம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் SST. சங்கர் மற்றும் OPS அணியினர் உட்பட 500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
News March 8, 2026
செஞ்சி அருகே துணிகரக் கொள்ளை!

விழுப்புரம்: செஞ்சியை அடுத்த பெரும்புகையைச் சேர்ந்தவர் முருகன்(55). இவர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றுகிறார். நேற்று முன் தினம் மனைவி ராஜேஸ்வரியுடன் வங்கிக்குச் சென்றார். திரும்பி வந்த போது, சில மர்ம நபர்கள் வீட்டிலிருந்து 20 பவுன் நகைகள், 210 கிராம் வெள்ளி, ரூ.60 ஆயிரம் கொள்ளை அடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


