News December 28, 2024
தேவாலா தனியார் தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு

கூடலூர் தேவாலா அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வனவர்கள் சுரேஷ்குமார் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர். மலைப்பாம்பு படுத்திருந்த நிகழ்வு தேயிலை தோட்ட தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
Similar News
News November 15, 2025
கோத்தகிரி அருகே பெண்ணை தாக்கிய கரடி!

கோத்தகிரி அருகே உள்ள ஓமக்குழி கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் தங்கி கூலி வேலை செய்து வருபவர் நேபாள நாட்டை சேர்ந்த பெண் தொழிலாளி தேவி(60). இவர் இன்று காலை மேல் தட்டப்பள்ளம் பகுதியில் தேயிலை பறிக்கும் பணியில் இருந்தபோது, புதர் மறைவில் இருந்து வெளியே வந்த கரடி தாக்கி காயமடைந்தார். இவருக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News November 15, 2025
நீலகிரி: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
News November 15, 2025
நீலகிரி: +2 போதும் ரயில்வே வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <


