News December 28, 2024
திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர் மீது வழக்கு

எரவாஞ்சேரி அடுத்த கூந்தலூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்கிற இளைஞர் சிறுவயதில் இருந்து காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக அப்பெண்ணை ஏமாற்றி அவருக்கு அடிபணிய வைத்துள்ளார். ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறியதால் தமிழ்வாணன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
திருவாரூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

திருவாரூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 7, 2026
திருவாரூர்: அதிமுக தேர்தல் பணிமனை அமைக்கும் பணி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பந்த கால் முகூர்த்த விழா நேற்று (மார்ச் 06) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.காமராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன், பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News March 7, 2026
திருவாரூர்: 412 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை, கடத்துதல் போன்றவற்றில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து போலீசார் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் முழுவர்கும் பறிமுதல் செய்யப்பட்ட 412 கிலோ குட்கா போன்ற போதைப் பொருட்கள், நெய்விளக்கு பகுதியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையில் அடுக்கி வைத்து தீ மூலம் அழிக்கப்பட்டது.


