News December 28, 2024
மாணவிக்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் ஆணை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை. மாணவியின் FIR வெளியானதால் ₹25 லட்சம் இழப்பீடு வழங்க, TN அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மாண்பைப் பாதுகாக்கும் வகையில் FIR எழுதப்பட வேண்டும் என அறிவுறுத்திய ஐகோர்ட், மாணவியிடம் எந்த வகையான கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும், அவர் தொடர்ந்து படிக்கத் தேவையான அனைத்து வசதிகளை ஏற்பாடு செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை: சசி கோரிக்கை

TN-ல் உள்ள முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு நடிகர் சசிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுப்பதாக தெரிவித்த அவர் தமிழ் மொழி பேசுபவர்கள் வேறு நாட்டில் இருந்து இங்கு வந்தாலும், இங்க இருந்து முன்பு போனவர்களாக தான் இருப்பார்கள் எனவும் கூறியுள்ளார். ‘ஃப்ரீடம்’ சிறப்பு காட்சிக்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசியுள்ளார்.
News July 10, 2025
தம்பதியருக்கு டாக்டர்கள் பரிந்துரை

தாம்பத்தியத்தில் ஆர்வத்தை தூண்டவும், ஆரோக்கியத்துக்கும் பின்வரும் பழங்களை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்: 1) ஸ்ட்ராபெரி: இதை சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் அதிக அளவு விருப்பம் உண்டாகும் 2) திராட்சை: இதை சாப்பிட்டால் தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும் 3) வாழைப்பழம்: இதை சாப்பிடுவது ஹார்மோனை அதிகரிக்க செய்யும். அதில் ஊட்டசத்து அதிகம் உள்ளது.
News July 9, 2025
மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்.. நவம்பரில் பணம்?

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் தகுதியான விடுபட்ட பெண்களை மீண்டும் சேர்க்கும் வகையில் விரைவில் சிறப்பு முகாம்களை நடத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம்கள் நவம்பர் வரை நடக்கும் என அரசு தெரிவித்துள்ளதால், புதிதாக சேர்க்கப்படும் பயனாளிகளுக்கு அதன்பிறகே ₹1,000 அளிக்கப்படும் என கூறப்படுகிறது.