News December 28, 2024
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள போலியான நண்பர் கோரிக்கை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். சைபர் குற்றவாளிகள் உங்கள் நண்பரின் சுயவிவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி உங்களிடம் அவசர நிலை காரணம் காட்டி பணம் கேட்கவும், தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் கோரிக்கை விடுவார்கள். உதவிக்கு அழைக்கவும் 1930.
Similar News
News March 5, 2026
ராணிப்பேட்டை நகராட்சி எண்களை தெரிஞ்சிக்கோங்க!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை, குடிநீர் வசதிகள், தெரு நாய் பிரச்னை குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் நகராட்சி அலுவலகங்களில் வழங்கலாம். மாவட்ட நகராட்சி எண்கள்:
அரக்கோணம்: 04177-236236
ராணிப்பேட்டை: 04172-272502
வாலாஜா: 04172-232207
ஆற்காடு: 04172-235708
மேல்விஷாரம்: 04172-266049
News March 5, 2026
ராணிப்பேட்டையில் தட்டி தூக்கிய அமைச்சர்!

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுராயபுரம் கிராமத்தில் நேற்று(மார்ச் 4) முக்கிய அரசியல் நகர்வு ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர். காந்தி முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
News March 5, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 04) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


