News December 28, 2024
இன்று அரை நாள் விடுமுறை

மறைந்த மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று அரைநாள் விடுமுறை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. 26ஆம் தேதி அவர் உயிரிழந்த நிலையில், ஜனவரி 1 வரை மத்திய அரசு துக்கம் அனுசரிக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (28.12.2024) நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 432 ▶குறள்: இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. ▶ பொருள்: மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.
News August 19, 2025
மனிதக்கழிவை யாரும் அகற்றக்கூடாது: வன்னியரசு

தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என அண்மையில் திருமா பேசியது சர்ச்சையான நிலையில், இதற்கு விளக்கமளித்த வன்னியரசு, தூய்மைப் பணிக்கு குறிப்பிட்ட சமூகத்தினரே பணியமர்த்தப்படுகிறார்கள். ஆகையால் இதை யோசித்து, சமூகநீதிப்பார்வையில் திருமாவளவன் கருத்து தெரிவித்ததாக கூறினார். எதிர்காலத்தில் எந்த சமூகத்தினரும் மனிதக்கழிவை அகற்றும் பணியை செய்யக்கூடாது என்பதே விசிகவின் தொலைநோக்கு பார்வை என்றார்.
News August 19, 2025
இன்று 186-வது உலக புகைப்பட தினம்

வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வுகளை, ஒரு புகைப்படம் எளிதாக உணர்த்திவிடும். அப்படி பல புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியுள்ளன. அப்பேர்பட்ட புகைப்படங்களின் உன்னதத்தையும், புகைப்படக் கலைஞர்களின் திறனை பெருமைப்படுத்தும் விதமாகவும் 1839-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆக.19-ம் தேதி ‘உலக புகைப்பட தினம்’ கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று 186-வது புகைப்பட தினம். Share it!