News December 28, 2024
‘தகவல்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம்’

வங்கியிலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் சைபர் குற்றவாளிகள் உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பை (Limit) அதிகரிக்க உதவுவதாகவும், அதற்கு உங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள், OTP உள்ளிட்ட வங்கி சார்ந்த மற்றும் தனிப்பட்ட தகவல்களை பகிருமாறு கேட்டால் எந்த தகவலையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம். நிதிசார் ஆன்லைன் குற்றம் பற்றிய புகாருக்கு 1930 எண்ணை அழைக்கவும்”- சேலம் மாவட்ட காவல்துறை!
Similar News
News November 14, 2025
ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டாவது நாளாக இன்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து சேலம் மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்பநாய் ரூபியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தினர். இதுவரை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்கு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நேற்று காலை வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து இன்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
News November 14, 2025
சேலம் அருகே 19 வயது பெண் சடலம்!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த சின்ன திருப்பதி சந்தை புதூரில் உள்ள ஒரு கிணற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர்.இறந்த பெண் மஞ்சுஸ்ரீ (19) என்பதும் அப்பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகள் என்று சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இறப்பு குறித்து தீவட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 14, 2025
சேலம் கோட்டம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாளையொட்டி இன்று (நவ.14) முதல் (நவ.17) வரை சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு, ஓசூர், சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்டம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


