News December 27, 2024
வள்ளியூரில் ரூ 10,000 மதிப்புள்ள ஆடு திருட்டு

வள்ளியூரை சேர்ந்தவர் சுடலை கண்ணு மனைவி மணிபாலா (46). இவர் வீட்டிற்கு முன்புறம் உள்ள இடத்தில் 10 ஆடுகளை கட்டி வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் ஆடுகளுக்கு இழை தழைகளை வைக்க சென்றபோது ஒரு ஆடு மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.10,000 ஆகும். இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் இன்று (டிச.27) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 22, 2025
நெல்லை: ரூ.1,31,500 சம்பளத்தில் வேலை APPLY NOW

நெல்லை மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <
News August 22, 2025
நெல்லையப்பர் ஆவணி மூலத் திருவிழா தொடக்கம்

நெல்லை டவுன், நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
நாளை காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாபவிமோசனம் பெற்ற வரலாற்று தொடர்புடைய திருவிழா ஆகும். அந்த நிகழ்ச்சி பத்தாம் திருநாளான செப்.1ம் தேதி அன்று மானூரில் அதிகாலை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் செய்து வருகிறார்.
News August 22, 2025
பள்ளிக்கு கத்தியை கொண்டு சென்ற மாணவரால் பரபரப்பு

திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் புத்தகப்பையில் கத்தி மறைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு மாணவனின் மிரட்டலால் பயந்து முன்னெச்சரிக்கையாக கத்தி வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. ஆசிரியர் மூலம் தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் போலீசுக்கு தெரிவித்தார். போலீசார் மாணவனிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து எச்சரித்து விடுவித்தனர்.