News March 24, 2024
மக்களை மிரள வைத்த இளைஞர்கள்

அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரத்தில் ஏவிஎஸ் தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தொழில்நுட்பத் திருவிழாவில் பங்கேற்ற இளைஞர்கள், பைக்கில் ஸ்டண்ட் அடித்து பல்வேறு சாகசங்களை செய்து காட்டி, பார்வையாளர்களை மிரள வைத்து அசத்தினர். இந்த இளைஞர்களுக்கு பள்ளி தலைவர் ராஜவிநாயகம் , முதல்வர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
Similar News
News October 27, 2025
சேலம்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

சேலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இன்று முதல் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தைகளுக்கு திரவம் அளிக்க வேண்டும்.SHAREit
News October 27, 2025
சேலம் அருகே தந்தையை கொன்று ஆற்றில் வீசிய மகன்!

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான கோட்டையூர் பரிசல் துறையில் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் (70) என்ற முதியவரின் உடல் காவிரி ஆற்றில் மிதந்தது.போலீசார் விசாரணையில் இவரது மகன் கோவிந்தராஜ், சங்கரனைக் கொலை செய்து காவிரி ஆற்றில் வீசியது தெரியவந்தது; இது குறித்து கொளத்தூர் போலீசார் கொடுத்த தகவல் அடிப்படையில் கர்நாடக மாதேஸ்வரன் மலை போலீசார் விசாரணை!
News October 27, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


