News December 27, 2024

சேலம் மாவட்டமும் மன்மோகன் சிங்கும்

image

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சேலத்தில் தொடங்கி வைத்த திட்ட பணிகள். கடந்த 2006ஆம் ஆண்டு பிப்.4ஆம் தேதி சேலத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட மன்மோகன் சிங், சேலம் – செங்கப்பள்ளி 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு செப்.05ல் சேலத்திற்கு மீண்டும் வருகை தந்த மன்மோகன் சிங், சேலம் உருக்காலை நவீனமயமாக்கல், விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

Similar News

News November 14, 2025

ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டாவது நாளாக இன்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து சேலம் மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்பநாய் ரூபியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தினர். இதுவரை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்கு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நேற்று காலை வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து இன்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

News November 14, 2025

சேலம் அருகே 19 வயது பெண் சடலம்!

image

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த சின்ன திருப்பதி சந்தை புதூரில் உள்ள ஒரு கிணற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர்.இறந்த பெண் மஞ்சுஸ்ரீ (19) என்பதும் அப்பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகள் என்று சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இறப்பு குறித்து தீவட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 14, 2025

சேலம் கோட்டம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

வார இறுதி நாளையொட்டி இன்று (நவ.14) முதல் (நவ.17) வரை சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு, ஓசூர், சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்டம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!