News March 24, 2024
கோவை வெப்பமாக திராவிடக் கட்சிகள் தான் காரணம்

குளுகுளு என்று இருந்த கோவை மாநகரம் வெப்பமானதற்கு திராவிட அரசுகளே காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில், “கோவை ஒரு காலத்தில் குளுகுளு என்று இருந்தது. தற்போது 2 முதல் 3 டிகிரிகள் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லவே முடியாத அளவுக்கு சூடாகி இருக்கிறது. இதை மாற்ற மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்” என்று பேசினார்.
Similar News
News April 29, 2025
சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்

வீட்டில் அண்ணன் உள்ளாடையுடன் சுற்றித் திரிந்ததால் சந்தேகத்தில் தம்பி தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். உ.பியின் கோரக்பூரில் தம்பிக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. புதுப்பெண் சரோஜின் சமையலை மாமியார், மைத்துனர் என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனை விரும்பாத கணவர் சதீஷ், சரோஜை அழைத்து கண்டித்துள்ளார். பின்னர், சந்தேகத்தில் மனைவியை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
News April 29, 2025
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..!

திருப்பதியில் வரும் பக்தர்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்டது தான் ஸ்ரீவாரி சேவை. இந்த சேவையில் ஜூன் மாதம் பங்கேற்க நாளை அதாவது, ஏப்ரல் 30-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். காலை 11 மணிக்கு ஜெனரல் சேவைக்கும், மதியம் 12 மணிக்கு நவநீத சேவைக்கும், மதியம் 1 மணிக்கு பரகமணி சேவைக்கும், மதியம் 2 மணிக்கு சீனியர் சேவைக்கும் முன்பதிவு நடைபெறுகிறது. முன்பதிவு செய்ய <
News April 29, 2025
அவையை அமளியாக்கிய ‘ஊர்ந்து’.. CM விளக்கம்!

காவல்துறை மானிய கோரிக்கைக்கு CM அளித்த பதிலுரையில் இடம்பெற்ற ‘ஊர்ந்து’ என்ற சொல்லை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், ஊர்ந்தோ தவழ்ந்தோ என, தான் யாரையும் குறிப்பிடவில்லை என விளக்கம் அளித்தார். முன்னதாக, CM ஸ்டாலின் பதிலுரையை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புறக்கணித்தார்.