News March 24, 2024

திண்டுக்கல்: நாளை வேட்பு மனுதாக்கல்

image

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் தாெகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் நாளை காலை 11- மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வேட்பு மனு செய்வதாக அறிவித்துள்ளார். இதற்கு ஆதரவாளர்களை தாடிக்கொம்பு சாலையில் உள்ள அஞ்சலி ரவுண்டானா அருகில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News October 27, 2025

பழனியில் கடையை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் – திண்டுக்கல் ரோடு பெட்ரோல் பங்க் அருகே உள்ள கடையை மர்ம நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்து சென்றார். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்கால் பச்சூரை சேர்ந்த குப்புசாமி மகன் செந்தில்குமார் (54) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

News October 27, 2025

திண்டுக்கல்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

image

திண்டுக்கல் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இன்று முதல் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தைகளுக்கு திரவம் அளிக்க வேண்டும்.SHAREit

News October 27, 2025

பழனி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

image

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள மானூறை சேர்ந்தவர் ஈஸ்வரன் வயது (27). இவர் கீரனூரில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான மானுருக்கு இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது நரிக்கல்பட்டி அருகில் உள்ள தயிர் சாலை என்னும் இடத்தில், எதிரில் வந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்தில் பலியானார். தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!